Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரச்சாரத்தில் உளறிய செல்லூர் ராஜு

ஏப்ரல் 06, 2019 05:31

மதுரை: என்ன கம்முனு இருக்கீங்க, மதுரைனாலே அதிரனும்ல, அண்ணன் எடப்பாடி வந்துருக்காறு எல்லாம் ஜோரா கை தட்டுங்க” என்று கூட்டத்தை உற்சாகப்படுத்தியபடி பேசத் தொடங்கிய செல்லூர் ராஜு “மோடியால் மட்டுமே நாட்டிற்கு பாதுகாப்பு கொடுக்க முடியும், அவர் ஒரு இந்தியன் ஸ்டார், கருப்பு பணத்தை ஒழித்தவர்” பதவி வெறி மோடியின் ரஃபேல் ஊழலை அமைச்சரின் கண்களில் இருந்து மறைக்க “மோடியின் ஐந்தாண்டு ஊழலற்ற ஆட்சி மீண்டும் வர வேண்டும்” என்றார். 

வழக்கம் போல் உளறிய செல்லூர் ராஜு “எடப்பாடி அரசு பொங்கல் பரிசாக வழங்கிய நூறு ருபாய் என்று ” பல முறை கூறிவிட அருகில் இருந்த தொண்டர் ஒருவர் “அண்ணேன் நூறு இல்ல ஆயிரம் ” என்று அரங்கம் அதிரும் குரலில் கூற, கேட்டுக் கொண்ட அமைச்சர் மாற்றி மீண்டும் “ஆயிரம் ரூபாய்” என்றார், ஸ்டாலினை பற்றி பேசிய அமைச்சர் “தி.முக.வின் நான்காம் தர பேச்சாளர் போல பேசிக் கொண்டிருக்கும் அவரது பேச்சை அவர்’ வீட்டு நாய் கூட கேட்காது, நாடு பா.ஜ.க மயமாக வேண்டும்” என்று நகைப்புடன் கூறி முடித்துக் கொண்டார். 

தலைப்புச்செய்திகள்